Sunday, 6 May 2018

சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பிண்னணி

📗 *சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்த🎵னையின் பிண்னணி* 📗

*கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் உள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கர நாராயண பிள்ளை அவர்களுக்கும், தெய்வ நாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.*

*இளமையில் வைணவ நூல்க📚ளையும், இராமாயணத்தை📕யும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ண பிள்ளை சமய வாழ்வின் நெறி முறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார். கிறி✝️ஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார்.*

*தமிழ் பண்டிதரான இவரை 1852ம் ஆண்டு  இடையன்குடியில் ஊழியஞ்செய்த மிஷனெரி கால்டுவெல் அவர்கள் தனது தமிழ் ஒப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்கும் பணிகளுக்காக சாயர்புரம்   செமினரியில் தமிழ் பண்டிதராக கிருஷ்ண பிள்ளையை பணியமர்த்தினார். பணியமர்த்தும்போது கால்டுவெல் ஐயரிடம் கிருஷ்ணபிள்ளை விதித்த கட்டளை இந்த நிர்வாகத்தில் தமிழ் இலக்கியப் பணி வேலைக்காகவே நான் ஒப்புக்கொள்கிறேன்  இங்கு தன்னை  யாரேனும் கிறிஸ்த✝️வனாக்க முயன்றால் வேலையை ராஜினாமா செய்துவிடுவேன் என்பதே !!!*

*சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ்செய்த Rev ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி அங்கு வந்து பணி செய்பவர்களிடம் பேசிய போது கிருஷ்ண பிள்ளை அவர்களிடம் ஒரு புதிய ஏற்பா📖ட்டைக் கொடுக்கவே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார் கிருஷ்ண பிள்ளை.‼️*

*பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச்செய்தார். கிருஷ்ணப்பிள்ளை Mrs  ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் ஏதோ வெறுப்புடன் கடந்து செல்வார். ஆனால் Mrs.  ஹக்ஸ்ற்றபிள் அம்மையார் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள். அது அவரை சிந்திக்கத் தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம்அவர்கள் நம்மை நேசி💟க்கிறார்களே என்று சிந்தித்தார். ஆயினும் மனம் மாறக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தார்.*

*அவ்வேளையில் நாகர்கோவிலில் படித்துக்கொண்டிருந்த  கிருஷ்ண பிள்ளையின் சகோதரர்  முத்தையா மற்றும்  தனுக்கோடி ராஜீ ஆகியவர்கள் கிறி✝️ஸ்தவத்தைத் தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..⁉️ அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து பாளையங்கோட்டை அருகேயுள்ள தனது சொந்த ஊரான கரையிருப்புக்கு நட🚶ந்தே சென்றார்.*

*ஆனால் அவரது சகோதரின் சா📣ட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயா📕ணம், புதிய ஏற்பா📙டு, இளமை பக்தி போன்ற நூல்க📚ளையும் வேதா📖கமத்தையும் படித்தார். ஒரே நாளில் ஆதியாகமம் முதல் யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்து கொண்டார். அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அ💟ன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதி கொண்டார். வேதா📖கமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தனது சகோதரன் தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறி✝️ஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார். தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து ஹென்றி ஆலப்ர்ட் கிருஷ்ணப்பிள்ளை (HAகிருஷ்ண பிள்ளை) என 1858 ஏப்ரல் 18ம் தேதி  மயிலாப்பூரிலுள்ள தூய தோமா  திருச்ச💒பையில்  திரு முழுக்குப்  பெற்றுக்கொண்டார்.*

*கிறி☦️ஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனே பாடுகளும் வரத்தொடங்கின. முதலில் அவரது மனை👨‍👩‍👧வியும் தாயாரும்  எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணி செய்ய சென்னைக்கு Rev.ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்அந்நேரத்தில் தான் தனக்கு கர்த்தரைத்தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து "சத்தாய் நிஷ்களமாய்"  என்னும் கீர்த்த🎶னையை இயற்றினார். நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறி☦️ஸ்து இயே❇️சுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்....‼️*

*இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயே☦️சுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழை நினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம் கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவார📚ங்களும் அடங்கிய இரட்சணிய தேவாரம் என்பன கிருஷ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது.*

*தமிழ் பண்டிதராக சாயர்புரக் கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆ💟த்தும அறுவடை பணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் ஐயர்  இவரை "மனிதரைப் பிடிக்கி🎣றவர் என அழைத்தார்.*
*இவர் ஏராளமான கிறி✝️ஸ்தவப் பாட🎼ல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல் தலைசிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூ📕லை எழுதினார்.*

*கிருஷ்ணபிள்ளை அவர்கள் "கிறி✝️ஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சத்தாய் நிஷ்களமாய் பா🎶டல் இன்றும் தேவா💒லயங்களில் விரும்பிப் பாடப்படும் கீர்த்தனையாகும்.*..‼️

*1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73 ம் வயதில் மரித்த இவர் சமாதானபுரத்திலுள்ள கல்லறைத் தோட்ட⚰️த்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.*

*ந🛐ன்றி*
 *"Watchmen brothers"*
🙏

Sunday, 22 October 2017

பாளையங்கோட்டை சாரா டக்கர்

பாளையங்கோட்டை சாரா டக்கர்
பாளையங்கோட்டைக்குப் போனீர்கள் என்றால் அங்கு சாரா டக்கர் கல்லூரி, சாரா டக்கர் ஹையர் செக்கண்டரி ஸ்கூல்,சாரா டக்கர் டிரெய்னிங் ஸ்கூல்,...என்ற பலகைகளைக் காணலாம்
உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..
இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி, அடைக்கப் பட்டிருந்த,ஒரு பெண் இருந்தாள்..
அவளால் ஒன்று தான் செய்ய முடியும்
ஒரு சாதாரண வீல் சேர்ல ..ஆலயத்துக்கு செல்வாள்
அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர் கிடையாது.
.ஒரு நாள் ஒரு தென்னிந்திய மிஷனரி அந்த ஆலயத்தில் பேசினார்.
.தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலே கோயிலுக்கு
பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி ஆக்கப் படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார்..
பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார்..
நொறுங்கிய மனதுடன் வீட்டுக்கு வந்தாள் சாரா..
அவளுக்கு 20 வயது இருக்கலாம்..
அவளின் அப்பாவின் பெயர் டக்கர்..
அவள் ஆண்டவரிடம் சொன்னாள்..
ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது என்று
ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது ..
அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும் அவளுக்கு ஒன்று தோன்றியது..
அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள்.
அவள் உறவினரிடம் இது பற்றி சொன்னாள்..
அவள் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை..
அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தை சேர்த்தாள்..
இரு ஆடைகளுக்கு மேல் அவள் வாங்கவில்லை..
ஒரு நாள் அந்த மிஷனரிக்குப் பணத்தை அனுப்பி வைத்தாள்..சாரா....
அதில் உருவாகியது தான்
சாரா டக்கர் ஸ்தாபனங்கள
இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய பள்ளியாக கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது..
அவள் இந்தியாவுக்கு வரவில்லை.
திருநெல்வேலிக்கும் வரவில்லை
அதில் படிக்கும் ஒவ்வொருவரும், சொல்வது
"நான் சாரா டக்கர் மாணவி " என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள்..
அவள் தன்னால் இயன்றதை செய்தார் அந்த இளம் பெண் சாரா
இது தான் பாளையங்கோட்டை சாராக்கர் கல்வி நிறுவனம் தோன்றிய வரலாறு
வரலாற்றில்தான் எத்தனை ஈரமுள்ள இதயங்கள் வாழ்ந்துள்ளன

Source

Sunday, 15 October 2017

One Sentence Sermons

Be Fishers of Men.... You catch 'em, He'll clean 'em.

A family altar can alter a family.

A lot of kneeling will keep you in good standing.

Don't put a question mark where God put a period.

Don't wait for six strong men to take you to church.

Exercise daily. Walk with the Lord!

Forbidden fruit create many jams.

Give God what's right, not what's left!

Give Satan an inch and he'll be a ruler.

God doesn't call the qualified; He qualifies the called.

God loves everyone, but probably prefers "fruits of the spirit" over "religious nuts."

God promises a safe landing, not a calm passage.

He who angers you, controls you!

He who is good at making excuses is seldom good for anything else.

He who kneels before God can stand before anyone!

Kindness is difficult to give away because it keeps coming back.

Most people want to serve God, but only in an advisory capacity.

Never give the devil a ride! He will always want to drive!

Nothing ruins the truth like stretching it.

The Will of God will never take you to where the Grace of God will not protect you.

To be almost saved is to be totally lost.

WARNING: Exposure to the SON may prevent burning!

Watch your step carefully! Everyone else does!

We don't change the message; the message changes us.

We're too blessed to be depressed.

Wisdom has two parts:
   1) Having a lot to say.
   2) Not saying it.

Sunday, 10 September 2017

பாவ சஞ்சலத்தை நீக்க....பாடல் பிறந்த வரலாற்று



#ஜோசப் ஸ்கிரீவன்வின் சாட்சி#

1819- ல் அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். தான் பிறந்த ஊரிலே இளமை கல்வியை முடித்தார்.பின்னர் டப்ளின் நகரில் திரித்துவ கல்லூரியில் பட்டம் பெற்றார். உடனே அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மண நாளுக்கு முன்தினம் மணப்பெண் குதிரையில் ஏறி ஒரு ஆற்றை கடக்க முயன்றபோது தவறி விழுந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை ஆற்றின் மறுகரையில் நின்று பார்த்தும் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்ற ஸ்கிரீவன் மிகவும் வேதனைப்பட்டார். அவரது மன நிலையும் பாதிக்கப்பட்டது. 

இந்த துயரத்தை மறக்க 1845-ம் ஆண்டு தனது 25-ஆம் வயதில் கனடாவுக்கு சென்றார். அங்கு நம்பிக்கை துறைமுகம் என்ற ஊரில் ஆசிரியராக பணியாற்றினார். மன நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தெய்வ பக்தி நிறைந்தவராகவும், பிறருக்காக வாழ்பவராகவும் விளங்கினார்.தன்னிடம் இருந்த பணத்தை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கு செலவு செய்தார். 

ஸ்கிரீவன் ப்ளைமவுத் சகோதரர் என்ற சீர்திருத்த சபையில் சேர்ந்தார். அச்சமயம் ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். மண நாளுக்கு குறிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு அந்த சபையில் சேரவிரும்பிய மண பெண்ணுக்கு ஒரு ஏரியில் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீர் மிகவும் குளிர்ந்திருந்ததால் ஜலதோஷம் பிடித்தது. பின்னர் அதிக காய்ச்சல் வந்து அவள் மரித்து போனாள்.

இந்தத் திருமணத்தின் மூலமாவது தன் மகன் சந்தோஷ வாழ்வு பெறுவான் என்று நம்பிய ஸ்கிரீவன்னின் தாய் தாங்க முடியாத துயரத்திற்குள்ளானார். தன் தாயாரை சமாதான படுத்த 1885-ல் ஒரு பாடலை எழுதினார். அந்த பாடல் தான்,

#பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்டர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்துசோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்,

#கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்பை
தீய குணம் மாற்றுவார்.

#பலவீனமானபோதும்
கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும்போது
புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! 
உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! 
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.!!.

இந்த பாடலுக்கு ஸ்கிரீவன் கொடுத்த தலைப்பு,
''இடைவிடாமல் ஜெபம் பண்ணுவோம்'' இந்த பாடலை பார்த்த அவரது நண்பர் இந்த பாடலை இயற்றியது யார் என்று கேட்டார். அதற்கு ஸ்கிரீவன்

"#ஆண்டவரும் நானும் சேர்ந்தே இயேற்றினோம்."

என்று தாழ்மையுடன் பதிலளித்தார்.

#உலகிலுள்ள 4,00,000 கிறிஸ்தவ பாடல்களில் மிகவும் விரும்பி பாடப்படும் பாடல் என புகழ் பெற்றது.

தன் வாழ்வின் கடைசி நாட்களை சுகவீனம், வறுமை மற்றும் மன வியாகுலத்துடன் களித்தனர்.இறுதியில் 1886-ம் ஆண்டு தமது 66-வது வயதில் நைஸ்லேக் என்னும் ஊரில் ஒரு சிற்றாற்றில்  தவறி விழுந்து மூழ்கி மரித்துப் போனார்.!!!.

#மனநோயாளி நிமித்தம் கர்த்தர் உலகமெங்கும் உள்ள மக்களுக்கு ஆறுதல் தரும் பாடலை அளித்தார் என்றால்? தாலந்து படைத்த உங்களையும்  கர்த்தர் இன்னும் மேன்மையாக எடுத்து  பயன்படுத்த மாட்டாரா?.!!.

"#கர்த்தருடைய கரத்தில் நம்மை அர்பணிப்போம், பெரிய காரியங்களை நம்முடைய  வாழ்க்கையில்  செய்வாராக".!!.

#ஆமென்.!!!.

Sunday, 6 August 2017

Why GOD Allows Difficult People in our Life’s???



Our life is surrounded with people who do things which hurt us immensely. We call these people difficult people. We also wonder why a loving GOD would allow these unloving beings into our life.

We know form Job that if satan wants to do something bad to us, he has to ask GOD permission to do so. But why does GOD permit him to do these things to us or why does he permit these unloving beings to hurt us.

Well from the Bible we all know that, everything GOD does is good. HE is the most loving person for each individual in the planet, either he/she deserves or not. So why does this happen?

Turns out the answer are in these verses.

For if you forgive other people when they sin against you, your heavenly Father will also forgive you. But if you do not forgive others their sins, your Father will not forgive your sins. -Matthew 6:14-15

By putting difficult people around us GOD is giving us a chance to be more like HIM. Of course it is hard to forgive a person who hurts you, but with prayer, you can.

But forgiving these people not only allows you adorn the character of GOD and move closer to HIM, a bonus is that you get your sins forgiven in the process.

Truly whatever GOD does is spectacularly awesome.

Hallelujah!!!

Sunday, 23 July 2017

*பரிசுத்த வேதாகமம் - உயிருள்ள உண்மை புத்தகம் என்பதற்க்கு ஆணித்தரமான 10 சான்றுகள்:*

1) *நோவா பேழை* - *1977 Ron Wyatt*- துருக்கி தேசம்
வேதாகமம் இந்த கப்பல் Urartu (Ararat), தற்போதைய துருக்கியில் இருப்பதாக நமக்கு தெளிவுபடுத்துகிறது. இந்த ஆதாரம் உண்மை என்று உலகத்திற்கு வெளிச்சமாகியது. துருக்கி அராசாங்கமும் இதனை ஏற்றுக்கொண்டு நோவா பூங்கா என்று அதை அறிவித்துள்ளது.
ஆதியாகமம் 8:4 - ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று
இதே மலையில் தான் நோவா கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டது. 
http://www.6000years.org/frame.php?page=noahs_ark

2) *சோதோம் & கொமோரா (Sodom & Gomorrah (in Israel)*- இஸ்ரேல் தேசம்
ஆதியாகமம் 19: 24. அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,*
II பேதுரு 2:6. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
இந்த அக்கினியும் கந்தகமும் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது. 
96 - 98 வரை சல்பர் அதில் அடங்கி இருக்கும். இந்த இடத்திற்கும் யாரும் பாதுகாப்பிலாமல் போக முடியாது. போனால் உடல் முழுவதும் வெந்து போகும். அதனால் அரசாங்கள் இந்த இடத்தை மூடி வைத்துள்ளது.
http://www.6000years.org/frame.php?page=sodom
wyattmuseum.com
www.ronwyatt.com
www.throneofgod.com
www.biblediscoveries.com
www.biblediscoveries.com
www.arkdiscovery.com

3) *மோசே கடந்து போன சிவந்த கடல் பிரதேசம்* யாத்திராகமம் 14ம் அதிகாரம் முழுவதும்...
யாத்திராகமம் 14:16. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
21. மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
27. அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
28. ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை
இந்த வேத வசனங்களும் நிரூபிக்கப்பட்டு விட்டன... 
மோசே என்ற ஓர் தேவன் மனிதன் மூலமாக எகிப்து அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரேவேலர்களை அழைத்து சென்ற உண்மை சரித்திரம் உண்மையாகியுள்ளது இந்த சரித்திரம் 3500 வருடங்களுக்கு முன் நடந்ததாக நமக்கு தெரியும். இந்த வழியையும் கண்டுபிடித்துள்ளார்கள். வேதாகமம் குறிபிட்டுள்ள பகுதியில் உள்ள கடல் பிரதேசத்தின் அடியில் ஓர் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளார்கள். எகிப்த்திய ராணுவ அடையாளங்களையும் கடலுக்கு அடியில் கண்டு பிடித்துள்ளார்கள். இதனை பற்றி பல ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தலகளை பாருங்கள்.. மேலும் தகவல்கள் கிடைக்கும்...
redseacrossingtruth
redseacrossing
wyattmuseum.com
www.ronwyatt.com
www.throneofgod.com
www.biblediscoveries.com
www.biblediscoveries.com
www.arkdiscovery.com/red_sea_crossing.htm

4) *சினாய் மலை (Mt. Sinai (aka Mt. Nebo) - இஸ்ரேவேலர்களை வழிநடத்தின இயேசு கிறிஸ்து அவர்களை வழிநடத்தின மோசேவுக்கு சீனாய் மலையில் வெளிபடுத்தினார்.*
யாத்திராகமம் 19:18 - கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
இந்த சீனாய் மலை இன்று சூடாய் இருப்பதை உள்ளதை நீங்கள் அறியலாம். மலை மேல்பகுதி இன்னமும் தீயில் எரிந்தது போலத்தான் காணப்படுகிறது.
www.throneofgod.com
mount-sinai-and-the-apostle-paul
www.arkdiscovery.com/mtsinaipax.htm
www.arkdiscovery.com/mt__sinai_found.htm
www.arkdiscovery.com/mt_sinai_found_part_2.htm

5) *டைனோசரஸ் காலத்தில் மனிதன் - யோபு 40*
19ம் நூற்றாண்டில் மனிதனுக்கு கிடைத்த பெரிய புதைபொருளில் இந்த மிருகமும் உண்டு. இந்த மிருகம் மனிதன் வாழ்ந்த காலத்தில் இருந்ததை யோபுவின் அதிகாரம் நமக்கு விளக்கி உள்ளது. இது 3500 வருடங்களுக்கு முன் நடந்ததாகும். இதனை வெளிப்படுத்தியதும் பரிசுத்த வேதாகமமே..
createddinos.com
discoverynews.us
creationevidence.org
answersingenesis.org

6) *இஸ்ரேல் தேசம் மீண்டும் மலர்ந்தது*- *1948* - *எசேக்கியல் 37:*
*சுமார் 3000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறியது*
12. ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
13. என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்
70ம் ஆண்டில் சிதறடிக்கப்பட்ட யூத ஜனம் பல்வேறு அதிகாரங்களால் உலகம் முழுவதும் கொடுமைபடுத்தப்பட்டது. அவர்களின் நிலத்தை மீட்டெடுத்து இந்த வேத வசனம் உயிருடன் இருப்பதை உறுதி செய்தது. இதன் பிறகு தான் இயேசு கிறிஸ்துவின் வருகைக்குரிய அடையாளங்கள் வேகமாய் நிறைவேறி வருகின்றன.

7) *யோசேப்பு நாணயம் கண்டுபிடிப்பு - 2009 - எகிப்து தேசம்*
செப்டம்பர் 2009ல் எகிப்தில் ஆராய்ச்சியாளர்களால் தீர்க்கதரிசி யோசேப்பின் முகமும், பெயரும் கொண்ட நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

8) *Nebo-Sarsekim tablet- தலைமை அதிகாரி* - எரேமியா 39:3 -
3. அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.
And all the princes of the king of Babylon came in, and sat in the middle gate, even Nergalsharezer, Samgarnebo, Sarsechim, Rabsaris, Nergalsharezer, Rabmag, with all the residue of the princes of the king of Babylon.
இந்த வசனத்தின் ஆண்டு கி.மு. 587 ஆகும். நேபுகாத்நேசர் எருசலேமை பிடித்த வருடமாக 587 உள்ளது. இந்த tablet எருசலேம் வீழ்வதற்கு 10 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது ஆகும். ஆக எரேமியாவின் வாழ்க்கையும், நேபுகாத்நேசரின் வாழ்க்கையும், சரித்தரத்தையும், பரிசுத்த வேதாகமத்தின் உறுதியையும் உண்மையாக்கியது ஜூன் 2007.

9) *பரிசுத்தப் பெட்டி - உடன்படிக்கை பெட்டி... 1978க்கு பிறகு... கொல்கொதா மலை*
II நாளாகமம் 35:3. இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,
இந்த பரிசுத்த பெட்டியை குறித்து நீங்கள் சபைகளில் பேசி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த பெட்டி இருந்த இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறதா? இதோ உங்களுக்கு ஓர் நற்செய்தி...
வசனம் 19. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
அதாவது.... கி மு 621ம் ஆண்டு எருசலேம் தேவாலயம் இடிக்கபடுவதர்க்கு 35 வருடங்களுக்கு முன் உள்ளது... பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுக்கையிட்ட போது உள்ளே இருந்து எந்த ஓர் பொருளும் வெளியே செல்லாமல் பார்த்து கொண்டார்கள். இதனால் நிச்சயம் இந்த பெட்டி சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே இருந்திருக்க வேண்டும். அல்லது அதை அருகில் எங்காவது மறைத்து வைத்திருக்கவும் வாய்புகள் உண்டு என்ற கோணத்தில் எருசலேமை ஆராய்ந்தார்கள். வேதாமத்தின் அடிப்படையில் எதிர்பார்த்தது போல கொல்கதா மலையின் அடியில் இந்த உடன்படிக்கை பெட்டியை கண்டு பிடித்தார்கள்.
இந்த மலையின் மேலே தான் இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்பட்டார். உடன்படிக்கை பெட்டியின் மேலே சிலுவை, இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்டது. நமக்கு ஓர் புதிய உடன்படிக்கையை தேவன் இந்த சிலுவையின் மூலமாக தந்தார். என்ன ஓர் ஆச்சரியம் பாருங்கள். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் எப்படி ஒத்து போகிறது என்று....
இதனை பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள 
http://www.6000years.org/frame.php?page=ark_of_the_covenant

10) தாவீது ராஜா - 1993 - Elah Valley in the Judean hills
*1993ன்று வரை தாவீது ராஜா என்ற ஒருவர் இருந்ததற்கான சரித்திர ஆதாரம் இல்லாமல் இருந்தது. இயேசுவை தாவீதின் குமாரன் என்று அழைக்கிறோம். ஆனால் சரித்திரம்? Elah Valley பகுதியில் தான் தாவீது கோலியாத்தோடு சண்டை போட்டான். இந்த பகுதியில் கிடைத்த ஓர் கல்வெட்டில் தாவீதின் வீடு என்ற ஓர் ஆதாரம் கிடைத்தது. பிறகு நிலத்தை ஆராய்ந்து பார்த்ததில் தாவீது இருந்ததற்கு அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.*
http://amazingbibletimeline.com/…/has-king-davids-palace-b…/
http://amazingbibletimeline.com/blog/david-and-goliath/
References: http://www.biblicalarchaeology.org/…/king-davids-palace-an…/
http://en.wikipedia.org/w/index.php…
http://en.wikipedia.org/wiki/Khirbet_Qeiyafa…
http://en.wikipedia.org/wiki/Khirbet_Qeiyafa
http://en.wikipedia.org/…/Alleged_King_David%27s_Palace_site
http://en.wikipedia.org/wiki/Large_Stone_Structure
http://www.haaretz.com/archaeology/.premium-1.543216 - 
See more at: http://amazingbibletimeline.com/…/has-king-davids-palace-…/…