Friday 19 August 2022

*தென்னிந்திய திருச்சபையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலங்களில் தென்னிந்திய திருச்சபை திருவிருந்து வழிபாட்டு முறைமை தமிழிசை பாடல்களை அறிமுகப்படுத்திய முன்னோடி*


 தென்னிந்திய திருச்சபையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலங்களில் தென்னிந்திய திருச்சபை திருவிருந்து வழிபாட்டு முறைமை தமிழிசை பாடல்கள்ஆகப் பாடப்பட்டு வருகிறது இதற்கான முன் முயற்சிகளை முன்னெடுத்து பாடல்களை எழுதி அதற்கு மெட்டு எனும் இசையமைத்து சிறப்பாக வழங்கியவர் மூத்த் குருவானவர் ஆன *அருள்திரு. மு.சா.ஜேசுதாசன் ஐயரவர்கள் ஆவார்கள்* 
அவர்களது வாழ்க்கை வரலாற்றை நாம் அறிந்து கொள்வது நமது ஆவிக்குரிய வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும் அவர்களது தென்னிந்திய திருச்சபை வழிபாட்டு முறைமை தமிழிசை பாடல் வழி திருவிருந்து ஆராதனை மேலே காணும் யூ ட்யூப் லிங்க் மூலம் கற்றறிந்து கொள்ளலாம்

*பெயர்* - மு.சாமுவேல் ஏசுதாசன்
M.S.J. என அனைவராலும் புகழ்ந்து அழைக்கப்பட்ட Rev.M.S. ஜேசுதாசன்

*பிறப்பும்குடும்பமும்*

 பிறந்தநாள் -06.08.1917
 தந்தை,தாயார்-முத்தையா உபதேசியார் - தேவகிருபை பொன்னம்மாள் 

*கல்வி*

• தொடக்கக் கல்வி பசுவந்தனை CMS தொடக்கப் பள்ளி
• நடுநிலைக் கல்வி பாளையங்கோட்டை CMS நடுநிலைப் பள்ளி
• உயர்நிலைக் கல்வி தூத்துக்குடி கால்டுவெல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பயிற்சி பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி (1937-1939)

*இசைத்திறமை*

 ஆர்மோனியம், வயலின், மவுத் ஆர்கன் 

*ஆசிரியர் பணி* தூத்துக்குடி கால்டுவெல் உயர்நிலைப் பள்ளி

*திருமணம்*

*மனைவி*

 Rev.தா.ஜெபமணி டேவிட் ஐயரவர்களின் மகளான சுகிர்தம் அம்மாள் 

*குருத்துவக் கல்வி*-

நாசரேத் திருமறையூர் –(1945-49)

*உதவி குரு* 

12.06.1949 நாசரேத் தூய யோவான் தேவாலயம்,

*குருவானவராக*

 05. 03.1950 அன்று நாசரேத் தூய. யோவான் தேவாலயம்,

*பணி செய்த இடங்கள்*

நாசரேத்
 வாகைக்குளம், உதவி குரு,

பில்லி கிரகாம் பின்தொடர் பணி,
Youth For Christ Work, கடையனோடை, 
TDCM செயலாளர் மற்றும் Diocesan Youth Work செயலாளர், கிறிஸ்டியாநகரம் சர்க்கிள் சேர்மன், மெஞ்ஞானபுரம் சர்க்கிள் சேர்மன், பாளையங்கோட்டை தூய. திரித்துவ பேராலயம் மற்றும் பேராயர் ஆணையாளராகவும் பணி செய்தார்கள். 

*இசை ஆர்வம்*

• கர்நாடக இசை மீது அதிக ஆர்வம் கொண்ட ஐயரவர்கள் தமது ஐந்து பெண் மக்களுக்கும் கர்நாடக இசை ராகங்களில் பெயர்கள் சூட்டினார்கள்

• தமிழ்இசை பாடல்வழி திருவிருந்து ஆராதனை முறைமையை ஏற்படுத்தியவர்கள்.

 *1983. இல் பணி நிறைவு*

*இதர திறமைகள்*

• நீரூற்று பார்க்கிற சிறப்பு திறமை 
• எழுத்துத் திறன் - ஆசிரியர் சிறுவர் வாழ்வு சிறுவர்களுக்கான மாத இதழை 
• நறுமணம் மாத இதழ் நறுமணம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்தது 
*பரம அழைப்பு* -22.01.1992 

நன்றி
@Tinnevelly Christian Historical Society
(ஜா.ஜான் ஞானராஜ்)

(கனம்.M.S. ஜேசுதாசன் ஐயரவர்கள் எனது தாயாருக்கு ஒன்று விட்ட மாமா ஆவார் எனது அம்மாவிற்கு பெரிய பாட்டியம்மா மகன்)

No comments:

Post a Comment