Sunday 14 July 2019

*கல்லிடைக்குறிச்சியும் ஸ்தோத்திரப்பண்டிகைகளும் (கூட்டமும்)*

நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களால் 1828 ல் உருவாக்கப்பட்டு அன்னாரது மேற்பார்வையின் கீழ் 1835 வரை இருந்த கல்லிடைக்குறிச்சி சபை 1835 க்குப் பின் பாளையங்கோட்டை CMS மிஷனரி கனம்.பெற்றிட் ஐயரவர்களின் (1835 - 37) மேற்பார்வையின் கீழ் வந்தது. அதன்பின் டோனாவூர் வட்டார CMS தலைமைமிஷனரிகளான
கனம்.எட்வர்ட் டென்ற் (1837 - 49)
கனம்.சார்லஸ் ரேனியஸ் (1849 - 50)
கனம்.ஜேசுதாசன்ஜான் (1851)
கனம்.தாமஸ் ஃபோக்ஸ் (1852 - 55)
கனம்.ஸ்டீபன் ஹாப்ஸ் (1854 - 56)
கனம்.தேவசகாம் ஞானமுத்து (1856 - 57)
கனம்.ஆஷ்டன் டிப் (1857 - 58) ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கல்லிடைக்குறிச்சி சபை வந்தது.
1858 முதல் 1878 வரை 20 ஆண்டுகளாக டோனாவூர் CMS சர்க்கிளுக்குட்பட்ட துணைவட்டமாக இருந்த இடையன்குளம் மிஷன் குருவானவரின் மேற்பார்வையின் கீழ்  கல்லிடைக்குறிச்சி இருந்தது.
கல்லிடைக்குறிச்சி சபையின் தொடக்ககால ஞானஸ்நானங்கள் டோனாவூர், இடையன்குளம் மிஷன் குருவானவரால் கொடுக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவேடுகள் மூலம் அறியமுடிகிறது. இக்காலங்களில் ஸ்தோத்திரப்பண்டிகைகள் CMS சர்க்கிள்களில் தொடங்கப்படவில்லை. 1878 ல் அம்பாசமுத்திரம் சேகரத்திற்கென முதல் குருவானவராக கனம்.தேவப்பிரசாதம் ஐயரவர்கள்  நியமிக்கப்பட்டவுடன் டோனாவூர் சர்க்கிள் இடையன்குளத்தின் கீழ் இருந்த கல்லிடைக்குறிச்சி சபை நல்லூர் சர்க்கிள் அம்பாசமுத்திரத்துடன் சேர்க்கப்பட்டது
இந்நிலையில் CMS சர்க்கிள் தலைமையிடங்களில் ஸ்தோத்திரப்பண்டிகைகளை CMS மிஷனரிமார் தொடங்கினர்.
1892 ல் நல்லூரிலும் 1894 ல் டோனாவூரிலும்
1902 ல் இடையன்குளத்திலும் ஸ்தோத்திரப்பண்டிகைகள் தொடங்கப்பட்டபோது சர்க்கிள் பண்டிகை என்ற முறையில் *நல்லூருக்கும்* நீண்டகாலத் தொடர்பு, உறவுமுறைத் தொடர்புகள் காரணமாக *டோனாவூர் மற்றும் இடையன்குளத்திற்கும்* ஸ்தோத்திரப்பண்டிகைக்காக கல்லிடைக்குறிச்சி சபைமக்கள் சென்று வந்தனர்.
நல்லூர் சர்க்கிளில் இருந்து புதிதாக அம்பாசமுத்திரம் சர்க்கிள் உருவாக்கப்பட்டபோது அம்பாசமுத்திரம் சர்க்கிளுக்கான ஸ்தோத்திரப்பண்டிகை *கடையத்தில்* தொடங்கப்பட்டது. ஸ்தோத்திரப்பண்டிகை கொண்டாட கல்லிடைக்குறிச்சி சபைமக்கள் கடையம் சென்று வந்தனர். இந்நிலையில் *1970 ஆகஸ்டு இரண்டாவது வாரம் வெள்ளி சனி ஞாயிறில்* அம்பாசமுத்திரம் சேகரத்திற்கான ஸ்தோத்திரப்பண்டிகை *கல்லிடைக்குறிச்சி CSI கிறிஸ்து ஆலய வளாகத்தில்* தொடங்கப்பட்டது
36 ஆண்டுகளாக அம்பாசமுத்திரம் சேகர பண்டிகையாகவும் பின் 13 ஆண்டுகளாக புதிய கல்லிடைக்குறிச்சி சேகர ஸ்தோத்திரப்பண்டிகையாகவும் கல்லிடைக்குறிச்சி தேவாலய வளாகத்தில் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் கொண்டாடப்படுவது கல்லிடைக்குறிச்சி தேவாலய வளாகத்தில் கொண்டாடப்படுகிற *50 ஆவது பண்டிகை*
*(பொன்விழா பண்டிகை* - *Golden Jubilee)* ஆகும்.
*(ஜா.ஜான்ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)*

No comments:

Post a Comment