Sunday 14 July 2019

நெல்லை அப்போஸ்தலனுக்கு *சார்லஸ் தியோஃபிலஸ் எவால்ட் ரேனியஸ்* (1790-1838)

*பிறந்த நாள்* (Nov-04)

=============================

🔥 பிறந்த நாடு - இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லாத பிரஷ்யா.

🔥 தாய் மொழி - ஜெர்மனி.

🔥வானுயர ஊசி கோபுரத்தைக் கட்டிய "நாயகன்"😇

🔥மென்மையான தன் வெள்ளைக் கால்களால் தேரிக்காடு, கல்ரோடு எங்கும் இரவு பகலாக நடந்து  371 சபைகளைத் தோற்றுவித்த "தங்கம்"😇

🔥திருநெல்வேலி முழுவதும் 200 பள்ளிகளை நிறுவி பாளையங்கோட்டையை Oxford City ஆக மாற்றின "மேதை"😇

🔥திருநெல்வேலி மாவட்டம் முழுதும் நற்செய்தி பரப்பிய "கடவுளின் தொண்டன்"😇

🔥இந்தியாவிற்கு இளம் வயதில் வந்து, வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்கி ஊழியம் செய்து, தன் தாயைப் பாா்க்க ஒரு முறை கூட தாயகம் திரும்பாத "தியாகி"!!

🔥 1814 இல் சென்னை வந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

🔥 1820 -1838 வரை 18 ஆண்டுகள் திருநெல்வேலி வாழ்க்கை.

🔥 நெல்லைச் சீமையில் இவர் நிறுவிய திருச்சபைகள் 371.

🔥 நிறுவிய பள்ளிகள் 107.

🔥 திருநெல்வேலி மண்ணிலே விதைக்கப்பட்டவர். இவரது கல்லறை பேசும் சாட்சியாக முருகன் குறிச்சியில் உள்ளது.

🔥 பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பாடத்திட்டங்களுக்கு தேவையான புத்தங்களை உருவாக்குதல், பள்ளி நடத்த திருச்சபைகள் மூலம் நிதி திரட்டுதல் என கல்வியை வெகுசன இயக்கமாக, தமிழ் வழிக் கல்வியாக முன்னெடுத்தவர்.

🔥 திண்ணை பள்ளிகளில் மேட்டுக் குடிகளிடம் முடங்கிக் கிடந்த "கல்வி என்னும் அறிவாயுதத்தை" சாமானியர்களுக்கும் சாத்தியமாக்கியவர்.

🔥 மெய்ஞ்ஞானபுரம், டோனாவூர், நல்லூர், சுரண்டை, சாந்தபுரம், பாவநாசபுரம், நேசபுரம், நலலம்மாள்புரம், இரட்சணியபுரம், சௌக்கியபுரம், தர்மநகரம், நாயினூர், விசுவாசபுரம், சந்தோஷபுரம், அனுக்கிரகபுரம், சீயோன் மலை, இடையன்குளம், ஆசிர்வாதபுரம் என ஏராளமான ஊர்களை உருவாக்கியவர்.

🔥 முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தவர். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். இயல்பாகவே இனிமையாகப் பேசக்கூடிய இவர், தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவர்.

🔥 துண்டு பிரசுர சங்கத்தை சென்னையிலும், நெல்லையிலும் நிறுவியவர் (Madras Tract and Religious Book Society).

🔥 ஒருநாள் வருமான காணிக்கை படைத்தல், கைப்பிடி அரிசி காணிக்கை, ஆலய பரிபாலன நிதி திட்டம் (Local Church Fund) போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்.

🔥 “தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தவர்.

🔥 "விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியார்களின் விதவை மனைவிகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்து வர ஏற்பாடு செய்தவர்.

🔥 கிறிஸ்தவர்களாக மாறிய சில இந்து குடும்பத்தினர், அவர்களுடைய பழக்கத்தின் காரணமாகத் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடைவிழாவில் கலந்து கொள்வதைத் தடுப்பதற்காக, பாளையங்கோட்டையில் 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங்கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

🔥 சென்னை வேதாகம சங்கம் 1817, நவம்பர் 5 இல் இவரது பெரு முயற்சியால் துவங்கப்பட்டது.

🔥 தமிழ் வேதாகமத்தின் மூன்றாவது திருப்புதலை செய்தவர் . புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் தானியேல் வரை மொழி பெயர்த்தார். கூட்டெழுத்து முறையை மாற்றி, வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.

🔥 தமிழில் முதல் அறிவியல் நூலை உருவாக்கியவர் (பூமி சாஸ்திரம்).

🔥 சாதிக்கு எதிராக முதல் கல்லை எறிந்து சமூக நீதி யுத்தத்தை துவங்கி வைத்தவர்.

🔥 பெண்களுக்கு பள்ளிக்கூட கதவுகள் நெல்லையில் முதன்முதலில் திறக்கப்பட காரணமாக இருந்த மகான்.

🔥 இவர் துவங்கிய பெண்களுக்கான விடுதிகளுடன் கூடிய சிறப்புப் பள்ளி, இந்தியாவில் துவங்கப்பட்ட பெண்களுக்கான இரண்டாவது பள்ளியாகும். அது இன்றும் மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளியாக நடைபெற்று வருகிறது

🔥 வெங்கு முதலியார் உள்ளிட்ட ஏராளமான மாற்று சமய நல் உள்ளம் படைத்தவர்களோடும் நட்பு பாராட்டியவர்.

🔥 காலரா, பெருவெள்ளம் என இயற்கை பேரிடர்கள் நேரிட்ட போதெல்லாம், தனக்குத் தெரிந்த முதலுதவிகள் மூலம் ஓடோடி உதவிய மனிதாபிமானி.

🔥 தமிழ் இலக்கணம் (A Grammar of the Tamil Language: With Appendix) உள்ளிட்ட நல்ல பல நூல்களைத் தந்தவர்.

🔥 திரள்கூட்ட சுவிசேஷ இயக்கம் (Mass Movement Evangelism) இவரிலிருந்தே இந்தியாவில் துவங்குகிறது.

🔥 நெல்லைக்கு அடையாளமாக விளங்கும் தூய திரித்துவப் பேராலயம் (Holy Trinity Cathedral) எனப்படும் ஊசிக்கோபுர ஆலயம் இவர் கட்டியது.

🔥 'அனைத்து மக்கள் கல்வி’, ‘சமூக நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் என, தெளிந்த கோட்பாடுகளோடு தென்பாண்டிச் சீமையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர்.

🔥 “ 1820 முதல் 1835 வரையிலான ரேனியஸின் வாழ்க்கை வரலாறே, திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்”

🔥 *“பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி, ரேனியஸ் ஐயர்”* என்று யூத மிஷனரி *டாக்டர் உல்ஃப்* (Dr. Wolf) என்பவர் தெரிவித்துள்ளார்.

🔥 தினமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவர் இவர். தனது சொந்த ஊரிலிருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்து, மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் வரை இவர் தன் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளின் பகுதிகள், கடிதங்கள், அறிக்கைகள் அடிப்படையில் *Memoir of the Rev. C.T.E. Rhenius* எனும் புத்தகம், அவரது மகனால் 1841 இல் வெளியானது.

🔥 இந்த நூல் இப்பொழுது *ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகள்* எனும் பெயரில் மூன்று தொகுதிகளாக தமிழில் வெளியாகிறது. ஏற்கனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்துவிட்ட நிலையில், அவரின் இந்த பிறந்த நாளான கடந்த 2018 நவம்பர் 5 இல் மூன்றாவது தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment