Sunday 4 November 2018

Why go to Church? --- A brilliant answer

Why go to Church?

I think this is fantastic, I just love the guy's answer, and the interpretation for the word BIBLE... enjoy and pass it on .

If you're spiritually alive, you're going to love this!
If you're spiritually dead, you won't want to read it.

If you're spiritually curious, there is still hope!

A Church goer wrote a letter to the editor of a newspaper and complained that it made no sense to go to church every Sunday.

He wrote: "I've gone for 30 years now, and in that time I have heard something like 3,000 sermons, but for the life of me, I can't remember a single one of them. So, I think I'm wasting my time, the preachers and priests are wasting theirs by giving sermons at all".

This started a real controversy in the "Letters to the Editor" column.

Much to the delight of the editor, it went on for weeks until someone wrote this clincher:

"I've been married for 30 years now.  In that time my wife has cooked some 32,000 meals.  But, for the life of me, I cannot recall the entire menu for a single one of those meals.

But I do know this:  They all nourished me and gave me the strength I needed to do my work.  If my wife had not given me these meals, I would be physically dead today.

Likewise, if I had not gone to church for nourishment, I would be spiritually dead today!"

When you are DOWN to nothing, God is UP to something!

Faith sees the invisible, believes the incredible & receives the impossible!

Thank God for our physical and our spiritual nourishment!

IF YOU CANNOT SEE GOD IN ALL, YOU CANNOT SEE GOD AT ALL !

B. I. B L. E.   simply means:  Basic Instructions Before Leaving Earth!

✝ சாம் ஜெபத்துரை ✝

✝ சாம் ஜெபத்துரை ✝

தென் தமிழ்நாட்டில் இடையன்குடி என்ற கிராமத்தில் ஜோசப் மற்றும் சவுந்திர மணி 👨‍🏫ஆசிரியப் பெரு மக்களுக்கு மகனாக பிறந்தார்  சாம் ஜெபத்துரை. இடையன்குடியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஆரம்பித்த அவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்ட் ஜான்ஸ் காலேஜ் மற்றும் சென்ட்  சேவியர் காலேஜ் பாளையங்கோட்டையில் பயின்றார். பின்னர் எம்.ஏ. அரசியல் அறிவியல் துறையில் தனது முதுகலை பட்டம் முடித்தார்👨🏻‍🎓 .

அவர் 8 வயதில்🙆‍♂ இருந்தபோது பயங்கரமான போலியோவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையின் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் சாதாரண ஆரோக்கியத்திற்கு திரும்பினார் ஆனால் இன்று வரை அவரது🚶🏼‍♂ கால்களில் ஒரு கால் மற்றதை விட அளவில் குறைவாக உள்ளது. இதனால் ஆரம்ப காலங்களில் பல அவமானங்களையும் நிந்தனையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது . "என் கிருபை உமக்கு போதுமானது" ஆம் அவருடைய பலவீனம் அவரது பலவீனத்தில் பரிபூரணமானது. அவரது விசுவாசத்திற்கு உண்மையாக  அவரை உயர்வாக வைத்தார் இறைவன். அவரை  சுவிசேஷத்தை பரப்புவதில் சிறந்த கிறிஸ்தவ கலை வல்லுனராக (கிறிஸ்தவ 🖋 எழுத்தானியாக) உயர்த்தினார்.

சுமார் 16 ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தின் வருமானவரித் துறையில் வேலை செய்தார் . அவர் 1975 ஆம் ஆண்டு 👨‍❤‍👨திருமணம் செய்தார். அவரது மனைவி வினோவும் வருவாய்த்துறையில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு👬👭 இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த பையன் ஜோசப் தன்னுடைய அப்பாவின் இறை சேவையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

1985ஆம் ஆண்டு சாம் ஜெபதுறை ராஜினாமா செய்து முழுநேர ஊழியராக மாறினார் . அவர் முழு நேர ஊழியத்திற்கான அழைப்புக்கு முன்பே தனது ஓய்வு நேரத்தில் இறைவனைச் சேவித்து வந்தார், 🗣தெருக்களில் பிரசங்கிப்பதன் மூலம், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளைப் பார்வையிட்டு அவர்களுக்காக 🙏ஜெபம் செய்து வந்தார்.

ஒரு நாள் மதியம், அலுவலகம் செல்லும் வழியில் இயேசு தம் முன்னால்😭 கண்ணீரோடு நிற்கும் காட்சியை கண்டார்."கடவுளே, நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவர், "என் மகனே, நான் பல ஆத்துமாக்கள் அறியாமையால் இருப்பதைப் பார்த்தேன் . அவர்களை ஆவிக்குரிய மன்னாவாக்க நீ செல்வாயா?" என்றார். சாம் ஜெபதுரை 💥கடவுளுடைய அழைப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.  முழு நேர ஊழியத்திற்கும் தனது பணியை ராஜினாமா செய்தார்.

1977 ஆம் ஆண்டு "அவருடைய பாஸ்டர் மனைவியின்" 📒புத்தகம் வாசித்த அவர் குறிப்பாக தமிழ் மக்களும் இத்தகைய புத்தகங்களை வாசித்திருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று அவர் கூறினார். அப்பொழுது கர்த்தர்: நீ ஏன் அதைச் செய்யவில்லை என்று கேட்டார். "ஆண்டவரே, நான் லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை பரப்ப விரும்புகிறேன் என்றார்.  நம்முடைய ஆண்டவர் மோசேயிடம் "உன்✋ கையில் என்ன இருக்கிறது" என்று கேட்டது போல் கேட்டார். (Ex 4: 2)  அதற்கு அவர்✒ ஒரு பேனா என்றார். அப்பொழுது கர்த்தர், "நான் உன்னோடு இருப்பேன், நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் உனக்குக் கற்றுக் கொடுப்பேன், உன் கையில் உள்ள பேனாவைப் பயன்படுத்தி உன்னை நான் மகிமைப்படுத்துவேன்" என்றார். இதுதான் நமது பேனா🖊 மனிதனின் வரலாறு.

தமிழ் கிறிஸ்துவ இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பு காரணமாக அவருக்கு அமெரிக்காவில் மூன்று பல்கலைக்கழகங்களில்👨🏻‍🎓 டாக்டரேட் வழங்கப்பட்டது 1. கலிபோர்னியா பல்கலைக்கழகம் செமினரி 2. சர்ச் மேலாண்மை சர்வதேச நிறுவனம், அமெரிக்கா & 3. Cornerstone பல்கலைக்கழகம், டெக்சாஸ், அமெரிக்கா.

நம்முடைய ஆண்டவர் தம் அழைப்பில் உண்மையுள்ளவர் அவருடைய மகிமைக்காக வலிமைமிக்க ஒரு சாதனமாக திகழ செய்தார். இதுவரை 750📖 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் நம் ஆண்டவரின் கையிலிருக்கிற பொற்🖊 பேனா.

எல்லா புத்தகங்களும் நிறைய ஜெபங்களுக்கு பிறகு எழுதியிருக்கின்றார், அவற்றில் உள்ள அனைத்து வார்த்தைகளும் 🔥பரிசுத்த ஆவியானவர் மூலம் தூண்டப்படுகின்றன. அவர் புத்தகங்கள் எழுதுவதற்கான திறமைகளுடன் மட்டுமல்லாமல் சக்திவாய்ந்த பிரசங்கியாகவும் இருக்கிறார்.

பரிசுத்த ஆவியின் வல்லமை அவருடைய பிரசங்கங்களிலிருந்து கூட்டங்களில் கலந்துகொள்பவர்களிடம் மிகுந்த ஆசீர்வாதம் அளிக்கிறது. சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி பல✈ நாடுகளுக்கு இறைவன் அவரை அழைத்து சென்றிருக்கிறார். இதுவரை அவர் உலகம் முழுவதும் 60 நாடுகளில் சுவிசேஷம் அறிவித்து இருக்கிரார். இறைவன் இன்று அவரை விண்ணுலகம் அழைத்து சென்றார்.

Sunday 16 September 2018

"இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் இரத்தசாட்சி மரணங்கள்"

*1,மத்தேயு- எத்தியோப்பிய நாட்டில் குடல் சரிய குத்தப்பட்டு இறந்ததார்.*

*2, மாற்கு- அலெக்சாண்டிரியாப் பட்டணத்தில் தெரு வீதிகளில் நாயைப் போல் இழுத்துச் சென்று சாகடித்தார்கள்.*

*3, பெரிய யாக்கோபு- எருசலேம் நகரில் தலையை வெட்டிக் கொன்றார்கள்.*

*4, லூக்கா- கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.*

*5, யோவான்- கொதிக்கும் எண்ணெய் உள்ள இரும்புச் சட்டியில் தூக்கிப் போட்டும் சாகாததால், பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் இரகசியமாக தரிசன நூலை எழுதினார். பின்பு ஆள் ஆரவாரமற்ற அத்துவானக் காட்டில் பட்டினி கிடந்து கொடிய வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார்.*

*6, அந்திரேயா- சிலுவையில் அறைந்து அதிலிருந்தவாறே பிரசங்கிக்கச் சொன்னார்கள் இயேசுவின் போதனைகளை பிரசங்கித்துக் கொண்டே மரித்தார்.*

*7, பர்த்தலோமேயு- உயிரோடு தோல் உரிக்கப்பட்டு உயிரைவிட்டார்.*

*8, தோமா- சென்னையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.*

*9, யூதா- மரத்தில் கட்டி வைத்து அம்புகளை எய்து கொன்றார்கள்.*

*10, பர்னபா- தெசலோனிக்கே என்ற நகரில் கல்லெரியப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*11, பேதரு- சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*12, சின்னயாக்கோபு- கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளியும் சாகாததால் தடியால் அடித்து சித்திரவதை செய்து சாகடித்தார்கள்.*

*13, பவுல்- ரோமச் சிறையில் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருந்த வேளையிலும் பாட்டுபாடி சுவிசேஷம் அறிவித்தார். நீரோ என்ற ரோமப் பேரரசால் தலை துண்டிக்கப்பட்டு மாண்டார்.*

*இதை படிக்கும் அன்பானவர்களே இதில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்த்துவுக்குள் வருகிற  பாடுகளையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக் கொல்லும் போது தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பார் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்வோம். மேலே நாம் படிக்கும் போது இத்தனை இரத்த சாட்சிகளை பார்த்தோம் அல்லவா பயமின்றி ஊழியம் செய்வோம்.*

*கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.*

*ஞானப்பாட்டு எனப்படும் பாமாலைப்பாடல்களும் அதன் மொழிபெயர்ப்புகளும்*


பழங்காலத்தில் ஞானப்பாட்டு என்னனழைக்கப்பட்டு தற்காலத்தில் பாமாலை என்றழைக்கப்படும் மேற்கத்திய பாடல்கள் ஆங்கிலம், ஜெர்மானியம் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க வந்த ஐரோப்பிய மிஷனரிகளால் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டவை.லுத்தரன் சபைகளில் பெரும்பாலும் தொடக்கப்பாடலாகப் பாடப்படும் "உம்மைத் துதிக்கிறோம்"பாடல் ஜெர்மானியத்திலிருந்து ஆங்கிலத்திற்கும் பின் தமிழுக்கும் மொழியாக்கம்செய்யப்பட்டது.நான்காம் நூற்றாண்டு லத்தீன் பாடலான "தேவனே உம்மைத் துதிக்கிறோம்"
எட்டாம் நூற்றாண்டு லத்தீன் பாடலான "ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே"ஆகிய இரண்டு பாடல்களும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை பாடலான இவையிரண்டும் புராட்டஸ்டண்டு கிறிஸ்தவ சபைகளில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.
"சபையின் அஸ்திபாரம் நல்மீட்பர் கிறிஸ்துவே" என்ற புகழ்மிக்கப் பாடல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது.
SPG மிஷனரியும் பன்மொழி பண்டிதருமான
பேராயர்.மகாகனம் இராபர்ட் கால்டுவெல் அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதேபோன்று CMS மிஷனரியும் டோனாவூர் வட்டார தலைமை மிஷனரியுமான கனம்.தாமஸ் உவாக்கர் அவர்களாலும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 1924 ல் CMS SPG மிஷன் சபைகள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்புவரை SPG சபைகள் பேராயர்.மகாகனம்.கால்டுவெல் அவர்களது மொழிபெயர்ப்பையும்
CMS சபைகள் டோனாவூர் தலைமை மிஷனரி கனம்.தாமஸ் உவாக்கர் அவர்களது மொழிபெயர்ப்பையும் பாடி வந்தார்கள்.
1924 ல் இருமிஷனரி நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டபின்பு கனம்.தாமஸ் உவாக்கர் ஐயரவர்களது மொழிபெயர்ப்பு பாடல் ஒருங்கிணைந்த திருநெல்வேலி திருமண்டலம் முழுவதும் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஞானப்பாட்டு எனும் பாமாலைப்பாடல்களை வெளியிட்டு வந்த CLS எனும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் CMS மிஷனரி கனம்.தாமஸ் உவாக்கரது மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டு அதையே இன்றளவும் பதிப்பித்து வெளியிட்டு வருகிறது.
கனம்.தாமஸ் உவாக்கர் பண்ணைவிளையில் பின் நீண்ட காலமாக டோனாவூரிலும் மிஷனரிப்பணியும் குருத்துவப்பணியும் செய்தவர்
CMS சங்கத்தின் அடிப்படைக்கொள்கையான சடங்காச்சாரங்களற்ற சுத்த சுவிசேஷத்தைப் பரப்புவதில் மிகுந்த ஆர்வமுடையவர்
CMS வட்டாரத் தலைமையிடமான பண்ணைவிளையில் சுவிசேஷப்பணியும்  சமூகப்பணியும் ஆற்றி வந்த எமி கார்மைக்கேல் அம்மையாரை CMS ன் மற்றொரு தலைமையிடமான டோனாவூருக்கு சுவிசேஷப் பணியாற்ற அழைத்து வந்து நட்சத்திரக்கூட்டம் என்ற Dohnavur Fellowship அமைய உதவிகரமாக உறுதுணையாக இருந்தவர் உவாக்கர் ஐயரவர்கள். கனம்.ஐயரவர்கள் வடபகுதிக்கு மிஷனரி சுற்றுப்பயணமாக மிஷனரி பணியாற்றச் சென்றிருந்த வேளையில் அங்கு திடீரென மரணமடைந்தார்கள்.
கனம்.தாமஸ் உவாக்கரும் கனம்.கார் மிஷனரியவர்களும் மிகநெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து திருநெல்வேலி திருமண்டலமெங்கும் மிஷனரி சுற்றுப்பயணம் செய்து நற்செய்திப்பணியாற்றி சபைகளைப் பலப்படுத்தி வந்தனர். இப்பணியில் மிஷனரி Rev.தாமஸ் உவாக்கரும் மிஷனரி Rev.E.S.கார் ஐயரவர்களும் தனித்திறமை பெற்றிருந்ததாகவும் இருவரும் பாலியர்சங்க ஊழியத்தை ஊக்கப்படுத்தியதாகவும்
இருவரும் "நற்போதகம்" மாத இதழ் ஆசிரியராகச் சிறப்புறப் பணிசெய்ததாகவும்
இருவரும் திருமண்டல பள்ளிகளுக்கானசட்ட விதிகளை வகுப்பதில் முக்கியஸ்தர்களாகப் பணிசெய்ததையும் திருமண்டல இருநூறாண்டு வரலாறு நூல்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கனம்.தாமஸ் உவாக்கர் ஐயரவர்களையும்
கனம்.கார் மிஷனரி ஐயரவர்களையும் நன்றியோடு நினைவுகூருவோம்.

*ஞாயிறு ஆராதனை- என்ன செய்ய வேண்டும்?*

_நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன் (சங்கீதம் 5:7)._

*1. ஆராதனைக்கு ஆயத்தப்படுங்கள்.*
ஆராதனைக்கு செல்லுவதற்கு முன்பதாகவே அதற்கான ஆயத்தங்களை செய்யுங்கள். ஆராதனைகளுக்காகவும்,  அதை நடத்தும் ஒவ்வொருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். புதிய ஆத்துமாக்களை அழைத்துவர திட்டமிடுங்கள்.

*2. தவறாமல் வாருங்கள்.*
தவிர்க்க முடியாத காரணத்தை தவிர, ஆராதனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வர தவறாதீர்கள். “எந்தவொரு வேலையும் அவர் ஆலயம் செல்லுவதிலிருந்து தடுத்தது இல்லை” என்று முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாசிங்டனை பற்றி கூறப்படுகிறது.

*3. சீக்கிரமாய் வாருங்கள்.*
ஆராதனைக்கு காலம் தாழ்த்தி,  அவசர அவசரமாக வருவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உகந்தது அல்ல. ஆலயத்திற்கு சரியான நேரத்திற்கு வரும்போது கர்த்தரை நீங்கள் கனம்பண்ணுகிறீர்கள்.

*4. முழு குடும்பத்தையும் அழைத்து வாருங்கள்* .
ஆராதனை நேரம் என்பது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டும் செல்லக்கூடிய சிறப்பு கூடுகை அல்ல. “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா கூறுவதை நினைவுகூருங்கள்.

*5. கூடுமானவரை முன்வரிசையில் அமருங்கள்* .
பின்வரிசைகளை தாமதமாய் வருபவர்களுக்கும், குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு விட்டு விடுங்கள்.

*6. பயபக்தியாய் இருங்கள்.*
ஆராதனை ஸ்தலம் என்பது திரையரங்கமோ அல்லது பொழுதுபோக்கிற்கான இடமோ இல்லை. நீங்கள் ஆராதனைக்கு வருவது கர்த்தரை ஆராதிப்பதற்காகவே தவிர, சிரிப்பதற்கோ, மற்றவர்களோடு பேசிக் கொண்டிருப்பதற்கோ அல்ல. உங்கள் போனை அணைத்து வைக்க வேண்டும் அல்லது சைலென்ட் மோடில் வையுங்கள். ஆராதனை வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் மிகவும் பயபக்திகுரியது.

*7. பரிவுடன் நடந்து கொள்ளுங்கள்.*
வரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை உள்ளே செல்லுங்கள் என்பதை தவிருங்கள். வயதானவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் வசதியான இருக்கைகள் கிடைக்க உதவுங்கள்.

*8. உற்சாகமாய் பங்கு பெறுங்கள்.*
ஆராதனையில் உற்சாகமாக ஈடுபடுங்கள். பிரசங்க நேரத்தில் கவனமாய் கவனியுங்கள்,  குறிப்பெடுங்கள். அச்சிடப்பட்ட வேதாகமத்தை கொண்டு வர மறக்காதீர்கள். நன்றாய் கைதட்டி பாடுங்கள்.  பார்வையாளராய் இருக்காதீர்கள். ஆராதனை செய்பவர்களாய் இருங்கள்.

*9. புதிதாய் வருபவர்கள் மேல் நோக்கமாயிருங்கள்.*
அவர்கள் நம்முடைய சிறப்பு விருந்தினர்கள். உங்கள் வீடுகளில் உங்கள் விருந்தினர்களை எப்படி உபசரிக்கிறீர்களோ அப்படி உபசரியுங்கள்.

*10. உற்சாகமாக  கொடுங்கள்.*
உற்சாகமாய் கொடுக்கிறவர்களிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள். உங்கள் காணிக்கை கர்த்தருக்குரியது என்பதை நினைவுக்கூறுங்கள். கர்த்தருடைய சமூகத்திற்கு வெறும் கையாக வர வேண்டாம் என்று வேதம் கூறுகிறது.

*11. முடிந்தவுடன் ஓடாதீர்கள்.*
ஆலயத்தில் தீ பிடித்தது போல ஆராதனை முடிந்தவுடன் ஓடாதீர்கள். மற்றவர்களிடம் நட்புடன் பேசுங்கள். குறைந்தது மூன்று முதல் ஐந்து பேருக்காவது கைக்குலுக்கி செல்லுங்கள். தனிமையாக நிற்பவர்களை கவனித்து விசாரியுங்கள்.

*12. தவறாமல் பங்குபெறுதல்.*
சபையில் உள்ள சிறு சிறு குறைகளை பார்த்து சபைக்கு வராமல் இருப்பதை நிறுத்தாதீர்கள். பூரணமான சபை என்று ஒன்றுமில்லை. நாம் அனைவரும் பூரணத்தை நோக்கி கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

சபை என்பது ஒரு குடும்பம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” யோவான் 13:35. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

சிட்டி ரிவைவல் ஏ. ஜி. சர்ச்,  திருச்சி.
www.cityrevivalagchurch.org

Holy Communion, Holy Eucharist facts in tamil

ஆண்டவர் பாடுபட்டு மரணமடைந்த பெரியவெள்ளிக்கு முந்தின நாளான பெரியவியாழனன்று இரவில் தம் சீடரோடு உட்கொண்ட ஐக்கியவிருந்து Holy Communion, Holy Eucharist -வடமொழியில் இரவு போஜனம் - இராப்போஜனம்
தமிழில் நாம் பயன்படுத்தும் ஹென்றிபவர் வேதாகம மொழிபெயர்ப்பு 1870 - 1871 காலத்தைய மொழிபெயர்ப்பு ஆகும் அக்காலத்து தமிழ்நடையில் ஏராளமான வடமொழியான சமஸ்கிருத சொற்கள் கலந்திருந்தன அப்படி கலந்து பேசுவதையே அக்கால பண்டிதர்கள் பெருமையாக சரியானதெனக் கருதினர்.
ஆனால் 1921 க்குப்பின் தமிழறிஞர்.மறைமலையடிகளார் தலைமையில் தனித்தமிழ் இயக்கம் வலுப்பெற்றபின் வடசொல்லை தமிழில் கலந்து பயன்படுத்துவது குறைந்து வந்தது.
நாமும் பெந்தேகோஸ்தே சபையினரும்  1870-71 பவர் மொழிபெயர்ப்பு வேதாகமத்தைப் பயன்படுத்துவதால் இராப்போஜனம் என்ற வடமொழிசமஸ்கிருத சொல்லையே பயன்படுத்துவதோடு அதையே சரியானதென அநேகர் வாதிடுவர். இடைக்காலத்தில் இதை பரி.நற்கருணை  என்றனர்ர
நன்மை+கருணை=நற்கருணை என்ற சொல் இராப்போஜனத்திற்கு அனைத்து சபைகளிலும் பயன்படுத்தப்பட்டது
இன்றளவும்
ஆல்டர் திருமேசை
நற்கருணை பீடம் எனவும்
திவ்யநற்கருணைஆசீர்
நற்கருணை நாதர்
ஆகிய சொற்கள்
நற்ருணை நாதனே பாடல்
கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்
தூய.தமிழ்மொழியாக்கம் நடைமுறைக்கு வந்தபிறகு
கத்தோலிக்க கிறிஸ்தவர்
திருப்பலி
கூட்டுத்திருப்பலி
ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி
என நற்கருணையை பெயர்மாற்றம் செய்துகொண்டனர்
ஆண்டவரது பாடுமரணத்தில் ரத்தமும் சதையும் ஒன்றாகிவிட்டது என்ற அடிப்படையில் சிறப்புநாட்களில்
அப்பத்தை திராட்சை ரசத்தில் முக்கி வழங்கியும் இதரநாட்களில் அப்பம் மட்டும் வழங்கும் முறையையும் நீண்டபலநூற்றாண்டுகளாகக் கத்தோலிக்க சபை கடைப்பிடித்து வந்தனர் போதகர்கள் மட்டும் அப்பம் சாப்பிட்டு திராட்சை ரசம் அருந்தி வந்தனர் சபையார் தங்களுக்கும் அவ்வாறு வழங்க சபையார் பல நூற்றாண்டுகளாக் கேட்டு வந்தனர்.
மார்ட்டின்லுத்தர் காலத்திலும் நற்கருணை முறையில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை
அவருக்குப்பின் லுத்தரன் சபைகளுக்கு தலைமைதாங்கிய மெலங்டன் நற்கருணை முறையில் நடைமுறையை மாற்றினார்.
புராட்டஸ்டண்ட் திருச்சபைகளும் பாதி பெந்தகோஸ்து சபைகளும் திருவிருந்து என்ற தூய தமிழ்நடையை சரியாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் இராப்போஜனம் என்ற வடசொல்லை திருமணம் என்ற தூய சிறப்பான சொல் இருக்கையில் விவாகம் மெய்விவாகம்
எனும் சொற்களைத் தவறாக பயன்படுத்துவதுபோல் பயன்படுத்தி அதுவே சரியென வாதிட்டு வருகின்றனர். மூன்று பாரம்பரிய சபைகளில் திருவிருந்து குறித்த சித்தாந்தம்
1.திருவிருந்தில்/திருப்பலியில் பரிமாறப்படும் அப்பமும் ரசமும்
இயேசப்பாவின் உடலாக ரத்தமாக மாறிவிடுகிறது
*Transubstantiated*(their substance having been changed)
என்பது கத்தோலிக்கத் திருச்சபை பாரம்பரியம்
2.திருவிருந்தில் பரிமாறப்படும் அப்பமும் ரசமும் பாடுபட்ட
கிறிஸ்துவின் சரீரத்திற்கும் இரத்தத்திற்குமான அடையாளம்
*Symbol*
என்பது
ஆங்கிலிக்க சபைகளின் பாரம்பரியம்
3.திருவிருந்தில் பரிமாறப்படும் அப்பத்திலும் ரசத்திலும் தேவபிரசன்னம் உள்ளது என்ற மார்ட்டின் லுத்தரின் கோட்பாடே
*God's Presence*
லுத்தரன் சபைகளின் பாரம்பரியம்.

*WHO KILLED SAMSON?*

*Delilah or the Philistines? None of these options is correct. Permit me to tell you how*

*Even if there were 10,000 Philistine soldiers, they couldn't have defeated Samson. Do you know why?  Samson's strength was not of this world; it was divine. As long as no one can defeat God, no army could have defeated Samson no matter how strong or many*

*Samson was raised a terror for the Philistines. He killed a lion with his bare hands, lifted the gate of a city on his shoulder and walked over 46 miles; he killed 300 Philistines soldiers with a jaw bone. What if he got a spear or sword?*

*So, who killed Samson? The answer is Samson. Yes! Samson killed himself! A man is his greatest enemy. What an enemy cannot do to a man, he would do to himself. Samson killed himself. He delivered himself to the lap of Delilah and used his own mouth to tell the secret of his power. His life promised so much but delivered so little*

*The Bible says, "People ruin their lives by their own stupidity, so why does GOD always get blamed?" (Proverbs 19:3. MSG)*

*Nobody can ruin your life except you do with your own hands. Although you can blame it on God or parents or government, you're the architect of your life; you are your greatest enemy. Even if your grandparents had done any evil, until you press the trigger it won't explode on your face*

*No Satan or witch has the power to destroy you no matter how much they hate you, you're the only one who can kill yourself by your actions*

*When the enemies try in vain to kill you, they lie in wait and allow you to kill yourself by your actions.*

*Goliath, the champion couldn't hurt David but adultery destroyed his family. The gentile nations couldn't hurt Moses, but anger killed him. When king Jeroboam stretched his hand against the prophet, his hand dried up; he couldn't hurt him, but his own disobedience turned him to a prey for a lion. Your greatest enemy isn't outside there, it's in you*

*Millions are killing themselves with their own mouth by what they eat and drink. Millions die of sexually transmitted diseases every year. Would you blame a witch for that?*

*Hundreds of thousands of divorce and breakup happen every year because people destroy their own marriages and homes with their own hands. Like Proverbs 14:1 says "Every wise woman builds her house, but the foolish one tears it down with her own hands.*

*If you fail, don't look far away, look inwards because what's killing you is inside of you. What you yield yourself to will either kill or save you. If you continue yielding yourself to fornication, that's what will kill you both spiritually or physically*

*Everyone has a seed of sin deposited in him through his Adamic nature. True repentance kills that seed but if you don't kill that anger, pride, jealousy, greed, lust, it won't just kill you in the future, it might have been killing you already. That's why no matter how much people die of cancer and diabetics people won't stop smoking and drinking because a man signs his own death warrant*

*Kill that seed before it kills you. Quit that habit, now!  Because your greatest enemy isn't a man or a spirit or Satan but you. Yes, You!*
*Bless someone with this message today.*

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா

Copied and pasted from Rev Augustine Jeevakani

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா
17-08-1874.   -   01-01-1945

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையில் 1874 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ஆம் நாள் பிறந்தார். அவருடைய தந்தை தாமஸ் வேதநாயகம் ஆங்கிலிக்கன் சபையில் ஆயராக இருந்தார். அவருடைய தாயார் பெயர் எல்லன்( Mrs. Ellen ).அவருடைய மூதாதையர்கள் மிகவும் தீவிரமான சிவபக்தர்கள். தாமஸ் 1839 ஆம் ஆண்டு CMS பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவரானார். தாமஸ் - எல்லன் தம்பதியருக்கு மூத்த மகள் பிறந்து 13 ஆண்டுகளுக்குப் பின் ஓர் ஆண் மகன் பிறந்ததால் அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள். 1889 ஆம் ஆண்டு அவருடைய தகப்பனார் மரித்தார். அன்றிலிருந்து அவருடைய தாயார்தான் அக்குடும்பத்தைக் காப்பாற்றினார்.

சாமுவேல்சன் அவருடைய தாயார் மெய்ஞானபுறத்திலிருந்த உண்டு உறையுள் பள்ளிக்கு ( Boarding School )  படிக்க அனுப்பினார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின் சென்னை சென்று சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் (  Madras Christian College  ) சேர்ந்து படித்தார். அப்போது அக்கல்லூரியின் முதல்வர்இவரைத் தனிமைப்படுத்திச் சிறப்பிக்கும் வண்ணம் இவருக்கு அசரியா என்று பெயரிட்டார். அங்கு திருச்சபையில் பின்னாளில் மிகவும் சிறந்து விழங்கிய K T Paul உடன் நட்புக் கிட்டியது. மேலும் அமெரிக்க அருள் தொண்டரான Sherwood Eddy யின் நட்பையும் பெற்றார். இருவரும் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாகவே இருந்தனர்.

கல்லூரியில் இறுதித் தேர்வு சமயம் மிகவும் நோயுற்றதால் இறுதித் தேர்வு எழுதவில்லை. பின்னர் முயர்ச்சிக்கவுமில்லை. B. A. பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் கேலியாக " நானும் BA தான் - Born Again Christian என்பவாராம்.

தமது 19 ஆம் வயதில் YMCA நற்செய்தியாளர் ஆனார்.
இதன் மூலம் இலங்கை போன்ற வெளி நாடுகளுக்கும்சென்று தமிழர்களுக்கு நற்செய்தி கூறினார்.தொடர்முயற்சிகள் மூலம் இந்தியர்களே நற்செய்தி அறிவிக்கும் வண்ணம் " இந்திய அருள்பணிக் கழகத்தை  ( Indian Missionary Society) திருநெல்வேலியில் உருவாக்கினார்.

YMCA செயலராக1895 - 1909 வரை பணிபுரிகையில்கிறிஸ்தவத் திருப்பணியில் " தன்னாட்டுமயமாதலைச் " ( Indigenization ) வலியுறுத்தினார்.

1905 ஆம் ஆண்டு செராம்பூரில் தேசிய அருள்தொண்டுக் கழகம் ( National Missionary Society) உருவாக்கப்பட்டது. அதற்கு சரியாகவே செயலராகப் நியமிக்கப்பட்டார். இக்கழகத்தின் மூலம் ஆப்கானிஸ்தான், திபெத், நேபாளம் ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்தார்.

1907 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலக்க் கிறிஸ்தவ மாணவர் இயக்க ( World Student Cristian Federation) மாநாட்டில் பங்குபெற்றார்.

1898 ஆம் ஆண்டு அன்பு மாரியம்மன் என்பவரைத் திருமணம் செய்தார். வெறும் 40 ரூபாயில் வரதட்சணை வாங்காமல் முடித்தார். அத்தம்பதியருக்கு 4 ஆண்கள் 2 பெண்கள் பிறந்தனர்.

1909ஆம் ஆண்டு ஆங்கிலிக்கம் திருச்சபையில் ஆயராக அருள்பொழிவு பெற்றார். ஆந்திராவில்உள்ள தோர்ணக்கல்லில் பணியாற்றினார்.

1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் நாள் தோர்ணக்கல்லில் தொடங்கப்பட்ட பேராயத்தின் முதல் பேராயராக கல்கத்தாவில்உள்ள தூய பவுலோ பேராலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

தொடக்கத்தில்மிகச் சிறியதாக இருந்த தோர்ணக்கல் பேராயத்தின் மிகப் பெரியதாக விரிவாக்கம் செய்தார்.  CMS, SPG ஆகிய கழகங்களின் சபைகளையும் தோர்ணக்கல்பேராயத்துடன் இணைந்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய - எண்ணிக்கையில் - பேராயராக விளங்கியது.

தோர்ணக்கல்லில் இந்திய இஸ்லாமியக் கலை நுணுக்கத்துடன் கூடிய மிகப்பெரிய பேராலயத்தைக் கட்டினார். 1936 ஆம் ஆண்டு அப்பேராலயம் மங்கலப்படைப்புச் செய்யப்பட்டது.அசரியா அப்பேராயத்தின் ஒரு ஓரத்தில்ஒரு குடிசையில் வாழ்ந்தார். ஆனால் முழு நேரமும் பேராயம் முழுவதும் மாட்டு வண்டி அல்லது சைக்கிளில் சுற்றித் திரிந்து நற்செய்தியை அறிவித்தார். அவருடைய மனைவியும் உடன் ஊழியர் ஒருவரும் உடன் செல்வர்.

நான்கு D க்களை அகற்ற முயன்றார்.

Dirty
Disease
Debt
Drink

ஆகியவற்றை அகற்ற முயன்று வெற்றியும் கண்டார்.
அடிமட்டத்தில் மக்களின்மனமாற்றத்தில் வெற்றி கண்ட ஊழியராக விழங்கினார். அவருடைய கூட்டங்களில் சுமார் 2,00,000 தாழ்த்தப்பட்ட , ஆதிவாசி மக்கள் பங்குபெறுவர். பெண்கள் பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.

1924 ஆம் ஆண்டு  8 ஆங்கிலேய ஆயர்கள், 53 இந்திய ஆயர்கள் அப்பேராயத்தில் இருந்தனர்.
1935 ஆம் ஆண்டு 250 இந்திய ஆயர்கள்,2000 சிற்றூர் ஆசிரியர்கள், மருத்துவமனைகள், கூட்டுறவுக் கடைகள், அச்சகம் ஆகியவை இருந்தன.

காந்திஜி யுடன் நட்பாக இருந்தார். ஆனாலும் இந்து சமயத்தின் சாதியத்தை வெகுவாக எதிர்த்தார். அவருடைய திருப்பணிக்கு அனைத்தும் ஆந்திராவில்உள்ள மாலாக்கள், மடிகர்களுக்காகவே  ( Malas and Madigars ) இருந்தது.

கிறிஸ்தவத் திருப்பணி சிறந்து விளங்க வேண்டுமென்றால் திருச்சபைகள் இணைந்து ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றார். இந்திய தேசியக் கிறிஸ்தவம் பெருமன்றத்தின் ( National Christian Council of India) தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றி இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளின் திருச்சபை ஒருமைப்பாட்டிற்காக உழைத்தார்.

1920 ஆம் ஆண்டு கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்குக் கெளரவப்பட்டம் அளித்தது.
1912 ஆம் ஆண்டுமுதல் அவரது மரணம் வரை இந்தியாவின் முதல் பேராயராகப் பணியாற்றினார்.

ஆந்திராவின் ஓரங்கட்டப்பட்ட ஏழைமக்களுக்கும் ஆங்கில அரசின் உயர்அதிகாரங்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.

1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோர்ணக்கல்லில் மரித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அவரது நீண்டநாள் கனவு நனவாகியது. 27-9-1947 அன்று தென்னிந்தியத் திருச்சபை உருவாகியது.

தோர்ணக்கல்லில் அவரது பெயரில் ஒரு கல்லூரியில் பெண்கள்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

அவரது சொந்த ஊர் வெள்ளாளன்விளையிலும் ஒரு மேல் நிலைப்பள்ளி உள்ளது.

அவருடைய பிறந்தநாள் ஆகஸ்டு 17 ஆம் தேதி வருகிறது.
நாம் கொண்டாடுவோம்.